இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி கடந்த 4 ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்தனர். இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களாக அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு குறைந்த நிலையில் கும்பக்கரை அருவியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு குறைந்து தற்போழுது நீர் வரத்து சீரானதால் கும்பக்கரை அருவியில் 3 நாட்களுக்குப் பின் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிப்பதாக வனத்துறை அறிவித்துள்ளனர். கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறை அனுமதித்துள்ளதால் ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ச்சி அடைகின்றனர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு