அப்போது அங்கு சென்ற ஆட்டோ டிரைவர்களான விக்னேஷ், குணால், ஹரிஹரன் ஆகிய மூன்று பேரும், அவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 29 வயது பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்து இழுத்துச் சென்றுள்ளனர்.
அந்தப் பெண் அவர்களிடமிருந்து தப்பித்து வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்த புகாரின்பேரில், இரண்டு தனிப்படை போலீசார் விக்னேஷ் (27), குணால் (25), ஹரிஹரன் (21) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.