மதுரை: செவிலியர்கள் தங்கும் அறையில் தீ விபத்து

மதுரை மாநகர் புதூர் பகுதியில் ஏற்கனவே செயல்பட்டுவந்த பாரதி மருத்துவமனை கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் ப்ளாஸ்டாபாரிஸ் ஷெட் அமைக்கப்பட்டு அதில் செவிலியர்கள் சிலர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று காலை செவிலியர்கள் தங்கவைக்கப்பட்டிருந்த அறையில் திடீரென ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தீப்பொறி வெளியேறி தீ பரவ தொடங்கியது. இதனை அடுத்து அங்கு தங்கியிருந்த 30க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அவசர அவசரமாக வெளியேறிய நிலையில் மருத்துவமனை பகுதியில் இருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு வெளியே அனுப்பி வைத்துள்ளனர். அப்போது ஒரு மாணவி மயக்கமடைந்ததால் பின்னர் இயல்புநிலைக்கு மாணவி திரும்பிய நிலையில் அருகில் உள்ள விடுதிக்கு அழைத்துச்செல்லப்பட்டார். 

இதனையடுத்து தீயானது மெல்லமெல்லவென பரவத் தொடங்கிய நிலையில் ஷெட் முழுவதிலும் கரும்புகை ஏற்பட்ட நிலையில் வானுயர அளவிற்கு கரும்புகை வெளியேறிய நிலையில் தல்லாகுளம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் மருத்துவமனை கட்டிடத்தில் ஏற்பட்ட கரும்புகையானது முழுவதிலும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தீ விபத்து தொடர்பாக புதூர் காவல் நிலைய ஆய்வாளர் மாடசாமி தலைமையிலான காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி