இன்று காலையில் கூடல்புதூர் அருகே மூக்கில் நுரையுண்ட நிலையில் கருப்பசாமியின் சடலம் காரில் இருந்து மீட்கப்பட்டதால் இது தற்கொலையா? வேறு ஏதேனும் காரணமா என்ற அடிப்படையில் கூடல்புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாஜக நிர்வாகி கருப்பசாமியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உரிய விசாரணை நடத்துமாறு உடலை பெற மாட்டோம் என பாஜக நிர்வாகிகள் குடும்பத்தினரும் பாஜகவினரும் தெரிவித்துள்ளனர். திங்கள்கிழமை இரவு வீட்டிலிருந்து சென்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். எனவே சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆப்கானில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம்