சுருளி அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கம்பம் கம்பம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சுருளி அருவி சுற்றுலாத்தலமாகவும் ஆன்மீக நலமாக விளங்கி வருகிறது. சுருளி அருவி நீர்வரத்து பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கத்தினால் நீர்வரத்து இன்றி காணப்பட்டது. 

இந்நிலையில் மேகமலை அருகே உள்ள தூவானம் அணையில் இருந்து சுருளி அருவிக்கு தண்ணீர் திறந்து விட வனத்துறை அதிகாரிகள், மின்வாரியத்திற்கு கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சித்திரை முதல் நாளான இன்று சுருளி அருவிக்கு ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் சுருளி அருவி வருகை புரிந்து அறிவியல் நீராடி விட்டு சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.

தொடர்புடைய செய்தி