சுருளி அருவியில் தொடர் மழையின் காரணமாக, அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது, இதனால் சுற்றுலா பயணிகள் நலன் கருதி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில் தற்போது மழை வரத்து குறைந்ததால், அருவியில் நீர் வரத்து சீரானது, இதனைத் தொடர்ந்து இன்று (ஜூன் 01) ஞாயிற்றுக்கிழமை முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க கம்பம் கிழக்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.