தேவாரம் - மேலசிந்தலைச்சேரி ஊராட்சியில் துப்புரவு பணியாளர்கள் கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது எந்த பதிலும் இல்லை. துப்புரவு பணியாளர்களின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு தேனி மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.