இந்தக் குழுவில் கேரளாவைச் சேர்ந்த கூடுதல் தலைமைச் செயலர் விஸ்வாஸ், தலைமை பொறியாளர் பிரியேஷ் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். கேரள அதிகாரிகளை முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு குழுவில் இணைத்துள்ளதை கண்டித்தும் அவர்களை நீக்கக்கோரியும் வலியுறுத்தி பெரியார் வைகை பாசன விவசாய சங்கத்தினர் மற்றும் வணிகர் சங்கத்தினர் தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள கூடலூர் லோயர் கேம்பில் எல்லையினை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். குமுளிக்குச் செல்ல இருந்த விவசாய சங்கத்தினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஆஸ்திரேலியா முதலிடம், நியூசிலாந்து முன்னேற்றம்