தேனி மாவட்டம் சின்னமனூர் பாரத் பெட்ரோல் பல்க் அருகில் இயங்கி வரும் ஸ்ரீராம் என்ற தனியார் நிதி நிறுவனம் விடுமுறை நாளான (டிசம்பர் 25) இயங்குவதாகவும், விடுமுறை நாளில் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு சென்று கடன் பணம் கேட்டு நிதி நிறுவன ஊழியர்கள் பெண்களை மிரட்டுவதாக குற்றம் சாட்டி, கண்டித்து அகில இந்திய பார்வர்டு ப்ளாக் கட்சியினர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.