இந்நிலையில் இந்த வரத்து வாய்க்காலை கடக்க முயன்ற யானை ஒன்று தண்ணீரில் விழுந்து அணை திறக்கும் சட்டப் பகுதியில் தேங்கிய தண்ணீரில் உயிருக்கு போராடியது. உடனடியாக தகவல் அறிந்த தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேரள வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு தமிழக பகுதிக்கு செல்லும் தண்ணீரின் வேகத்தை குறைப்பதற்காக ஷட்டர் பகுதியை முழுமையாக அடைத்தனர். இதனால் தண்ணீர் வேகம் குறைந்தது சுதாரித்துக் கொண்ட யானை நீர் வரத்து வாய்க்காலில் இருந்து பாதுகாப்பாக கரையேறி வனப்பகுதிக்கு சென்றது.
காட்டு யானைக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் துரிதமாக செயல்பட்ட வனத்துறை அதிகாரிகளையும் தமிழக பொதுப்பணித்துறையினரையும் அப்பகுதி மக்கள் பாராட்டினார்கள்.