தேனி மாவட்டம் கம்பம் வடக்கு காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, காமயகவுண்டன்பட்டி சாலையில் சாக்கு மூட்டைகளுடன் சென்று கொண்டிருந்த சிலரை போலீசார் சோதனையிட்டனர். அந்த மூட்டைகளில் 22 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் செல்வம் (45), பாண்டீஸ்வரி (40), முத்துலட்சுமி (43), கற்பகவள்ளி (42) ஆகியோரை கைது செய்தனர்.