தேனியில் கனமழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, இன்று (ஜூன் 13) தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 

அதேபோல் ஜூன் 14, 15 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், நீலகிரிக்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி