திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சௌந்தரபாண்டி (34) என்பவர் நேற்று (மே 25) தனது நண்பருடன் பைக்கில் தேவதானப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சாய்பு என்பவர் ஓட்டி வந்த கார் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.