கோம்பை: வயிற்று வலியால் தொழிலாளி தற்கொலை

கோம்பை அருகேயுள்ள பல்லவராயன்பட்டியைச் சேர்ந்த 54 வயது தொழிலாளி முருகன், கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவ சிகிச்சையும் பலனளிக்காததால், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உறவினர்களால் மீட்கப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார். இதுகுறித்து கோம்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி