போடி அருகே மாட்டு கொட்டத்தில் தீ விபத்து

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள துரைராஜபுரம் கிராமத்தில் போடி-தேனி தேசிய நெடுஞ்சாலையோரம் தனியார் தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் மாட்டுக் கொட்டம், வைக்கோல் படப்பு ஆகியவை அருகருகே அமைந்துள்ளன. இந்த நிலையில் வைக்கோல் படப்பு இருந்த பகுதியில் தீப்பற்றியது. தீ வேகமாக பரவி மாட்டுக் கொட்டத்துக்கும் பரவியது. 

இதில் வைக்கோல் படப்பு, மாட்டுக் கொட்டம், அங்கு வைக்கப்பட்டிருந்த விவசாய இடுபொருள்கள் ஆகியவை தீயில் எரிந்து நாசமாயின. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற போடி தீயணைப்புத் துறையினர் போராடித் தீயை அணைத்தனர். தீ விபத்தில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன.

தொடர்புடைய செய்தி