தேனி மாவட்டம், போடி அருகே கோடாங்கிபட்டியில் குடும்ப தகராறில் கணவன் ராஜீவ் மனைவியை கத்தியால் குத்தியதில், ஆத்திரமடைந்த மனைவி ரஞ்சிதாவின் சகோதரன் ராஜேஷ், ராஜீவை கத்தியால் குத்தினார். காயமடைந்த தம்பதி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸார் இருவர் மீதும் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.