மார்க்கையன்கோட்டை பகுதியைச் சேர்ந்த 27 வயது ரகுபதி, சில மாதங்களுக்கு முன்பு மனைவியைப் பிரிந்து சென்றதால் மனமுடைந்து காணப்பட்டார். தீராத வயிற்று வலியாலும் அவதிப்பட்டு வந்த அவர், வேதனையில் நேற்று முன்தினம் விஷம் அருந்தி உள்ளார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இது குறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.