வாடிப்பட்டி: பாலம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா தாதம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் உமாதேவி அவர்கள் தனது உதவியாளர் அளித்த தகவலின் பேரில் நேற்று முன்தினம் (மார்ச். 18) இரவு திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் செம்மினிப்பட்டி பாலம் கேசவன் காபி பார் அருகே சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக தகவல் அறிந்து அங்கு சென்று பார்த்த பின்பு இது குறித்து நேற்று (மார்ச். 19) வாடிப்பட்டி காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார். போலீசார் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி