தேனி மாவட்டம் உத்தமபாளையம், கம்பம் பகுதிகளில் பொதுமக்களுக்கும் வழிபாட்டுத் தலங்களுக்கும் இடையூறாக உள்ள மதுபானக் கடைகளை அகற்றக் கோரி சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) சார்பில் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கையை வலியுறுத்தி கட்சியின் சட்டமன்றத் தொகுதி தலைவர் அஜ்மீர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் மனுவில் கையொப்பமிட்டுள்ளனர்.