ஆண்டிபட்டி சக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி முத்துச்சாமி, நேற்று ஆண்டிபட்டி வைகை அணை மெயின் ரோட்டில் சாலையோரம் நடந்து சென்றபோது, பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதி பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஆண்டிபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.