கடன் தொல்லை; கணவன் மனைவி தற்கொலை

தேனி மாவட்டம் கூடலூர் ஜக்கன் நாயக்கர் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 44). இவர் கூடலூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக தனது மனைவி மற்றும் குழந்தைகளைப் பிரிந்து தனது தாய் தந்தையுடன் வாழ்ந்து வருகிறார். நேற்று செப்.2 அதிகாலை தனது உறவினருக்கு சிவக்குமார் தொலைபேசியில் அழைத்து எனது தாய் தந்தையர் இறந்து விட்டனர். நான் தற்கொலை செய்வதற்காக மருந்து சாப்பிட்டு உள்ளேன் என்று கூறியுள்ளார்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உறவினர்கள் அங்கிருந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல் துறையினர் சம்பவ இடத்தில் இறந்து கிடந்த தாய் தந்தையான கணேசன் (70), கிருஷ்ணம்மாள் (65) ஆகிய இருவரின் உடலை கைப்பற்றி கம்பம் அரசு மருத்துவமனைக்கு உடல் கூராய்வு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் முடியாத நிலையில் இருந்த சிவகுமாரை சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். விசாரணை மேற்கொண்ட கூடலூர் காவல் துறையினர் முதல் விசாரணையில் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த கூடலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி