உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உறவினர்கள் அங்கிருந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல் துறையினர் சம்பவ இடத்தில் இறந்து கிடந்த தாய் தந்தையான கணேசன் (70), கிருஷ்ணம்மாள் (65) ஆகிய இருவரின் உடலை கைப்பற்றி கம்பம் அரசு மருத்துவமனைக்கு உடல் கூராய்வு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் முடியாத நிலையில் இருந்த சிவகுமாரை சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். விசாரணை மேற்கொண்ட கூடலூர் காவல் துறையினர் முதல் விசாரணையில் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த கூடலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.