தேனி மாவட்டம், தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையத்தில் கடந்த 32 ஆண்டுகளாக உதவி பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ராஜா அழகணன் அவர்களுக்கு நேற்று தேனியில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் கூட்டுறவு அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து பரிசுகளை வழங்கினர். ராஜா அழகணன் தனது நீண்ட கால பணியில் ஆற்றிய சேவைகளைப் பாராட்டி இந்த விழா நடத்தப்பட்டது.