நேற்று (நவ. 2) தேனி சாலையில் பராமரிப்பிற்காக கொண்டு வரப்பட்ட கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. மதுரையில் கார் பராமரிப்பு நிலையத்தில் பணிபுரியும் தேனியைச் சேர்ந்த ஜோதிராஜசேகரன் என்பவர் சோதனைக்காக காரை தேனிக்கு எடுத்து வந்தபோது இந்த விபத்து நேரிட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதுகுறித்து தேனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.