தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்த முருகன் (37), தேனி ஆயுதப்படை வாகனப் பிரிவில் ஏட்டாகப் பணிபுரிந்து வந்தார். கடந்த 2024 டிசம்பர் 16 அன்று நடந்த சாலை விபத்தில் அவர் உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு அரசின் ஒப்பந்தப்படி, ₹1 கோடி இழப்பீட்டுத் தொகையை தேனி ஸ்டேட் வங்கி ஊழியர்கள், முருகனின் தாயார் சீலைக்காரியிடம் காசோலையாக வழங்கினர்.