கணவனை சமோசா வாங்கி வர சொல்லிவிட்டு, தற்கொலை செய்த மனைவி.!

உ.பி மெயின்புரியில் வசிக்கும் சோட்டு என்பவர் வேலைக்கு செல்லாமல் திருட்டு தொழில் செய்து வந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே கடந்த ஜூன் 9ம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் கணவரிடம், அஞ்சலி சமோசா வாங்கி வரச் சொல்லியுள்ளார். சமோசாவுடன் கணவர் வீடு திரும்பியபோது, ​​அஞ்சலி வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்தை தாங்க முடியாத சோட்டு குடும்பத்தினருக்கு போன் செய்து கூறிவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார்.

தொடர்புடைய செய்தி