கள்ளக்காதலில் இருந்த மகளை வெட்டிக்கொன்ற சித்தப்பா

குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே இளம்பெண்ணை வெட்டிக் கொலை செய்த வழக்கில், மாற்றுத்திறனாளியான அவரது சித்தப்பாவை போலீசார் கைது செய்துள்ளனர். கணவன் பிரிந்த நிலையில், அந்த பெண் கள்ளக்காதலனுடன் தொடர்பில் இருந்ததை கண்டித்தபோது தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சித்தப்பா அரிவாளால் தாக்கியதில் பெண் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி