தமிழ்நாட்டின் கடன் சுமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தவெக அரசை விமர்சித்துள்ளார். திமுக ஆட்சிதான் கடன் சுமையை ஏற்படுத்தியது என்ற மாயத்தோற்றத்தை வெள்ளை அறிக்கை வெளியீட்டின்போது நிதியமைச்சர் உருவாக்கியதாக அவர் குற்றம்சாட்டினார். தவெக அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் போது அரசின் கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும் என ஏற்கனவே கூறியதாக தெரிவித்தார். மேலும், இந்த ஆண்டு ரூ.1.22 லட்சம் கோடி நிகர கடன் பெறப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.