தஞ்சையில் விஜய்க்கு செங்கோல் மற்றும் நெற்கதிர் பரிசு அளித்த தவெகவினர்

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் இன்று (மார்ச்.4) தவெக பரப்புரை கூட்டம் நடைபெற்றது. அதில் அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் சார்பில் 'நெற்கதிர் கட்டு' மற்றும் 'செங்கோல்' பரிசாக வழங்கப்பட்டது. மேடையில் தமக்கு அளிக்கப்பட்ட அந்த செங்கோலையும், நெற்கதிரையும் விஜய் கைகளில் ஏந்தி உயர்த்தி பிடித்தபோது, அங்கிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக மிகுதியால் முழக்கமிட்டு ஆர்ப்பரித்தனர்.

நன்றி:Newstamil24x7

தொடர்புடைய செய்தி