பெற்றோரை தீ வைத்து எரித்துக் கொன்ற மகன்.. பகீர் பின்னணி

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சென்னிதலா கிராமத்தைச் சேர்ந்தவர் ராகவன் (96). இவரது மனைவி பாரதி (86). இவருக்கு விஜயன் என்ற மகன் இருக்கிறார். இன்று அதிகாலை 3:30 அளவில் ராகவன் வீட்டில் தீ பற்றி எரிந்தது. வீடு முற்றிலும் எரிந்ததால் ராகவன் மற்றும் பாரதியின் உடல்கள் கருகிய நிலையில் மீட்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சொத்து பிரச்சனை காரணமாக பெற்றோரை மகன் விஜயன் தீ வைத்து எரித்துக் கொலை செய்தது தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி