"இன்றைய பட்ஜெட் தாக்கல் வரலாற்று சிறப்புமிக்கது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டை இன்று (பிப்.1) மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்தார். இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், “எதிர்காலத்தை மனதில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தில், இந்தியாவின் 140 கோடி குடிமக்கள் திருப்தி அடையவில்லை. நாம் கூடிய விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற விரும்புகிறோம்” என்றார்.
நன்றி: நியூஸ்18