பீகார் தேர்தல் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “பீகார் சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான இந்திய தேசிய ஜனநாயக கூட்டணியின் பொய்களை நிராகரித்து, பதிலடியைக் கொடுத்துள்ளனர். அதிமுக சார்பாக, பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா மற்றும் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.