அண்ணா சிலையின் கையில் தவெக கொடியை வைத்து அக்கட்சியினர் அத்துமீறல்

தமிழக சட்டமன்றத் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது, பேரறிஞர் அண்ணா சிலையின் கையில் தவெக கொடியை வைத்து அக்கட்சியினர் அத்துமீறலில் ஈடுபட்டதாகப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் வகையில் இத்தகைய செயல்கள் அமைந்திருப்பதாகப் பல்வேறு அரசியல் தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் போராட்டங்கள் எழுந்துள்ளன. தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழலில் இந்தச் சம்பவம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி