“தேர்தல் ஆணையத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் பதிவை மீட்கவே, தனிச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” என மமக தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். மேலும், “தனிச்சின்னத்தில் நின்றிருந்தால் தவெக அரசில் அமைச்சர் பதவி பெற்றிருக்கலாம் என்ற ஆதங்கத்தோடு தீர்மானம் நிறைவேற்றப் பட்டதாக திரித்துப் பரப்பப்படுகிறது. இது முற்றிலும் தவறு” எனவும் குறிப்பிட்டுள்ளார்.