ஆளுநர் நடுநிலையான அதிகாரியாக செயல்படாமல் பாஜகவின் பிரதிநிதியாகவே சட்டப்பேரவைக்கு வந்து சென்றிருப்பதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று (ஜன.20) பேட்டியளித்த அவர், "அரசு தயாரித்த உரையை சட்டப்பேரவையில் வாசிக்காமல், எதிர்க்கட்சிகள் கூட சொல்லாத பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்" என விமர்சித்துள்ளார். மேலும், இதன் மூலம் மக்களிடம் பொய் பிம்பத்தை உருவாக்க ஆளுநர் முயற்சிக்கிறார் என அவர் கூறியுள்ளார்.
நன்றி:SunNews