தமிழகத்தை ஆளும் பொய்க்கால் குதிரை அரசு.. எடப்பாடி பழனிசாமி

தாம்பரம் அருகே கானா பாடகர்கள் பரத், சீனு ஆகியோர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக காவல்துறை மேய்ப்பன் இல்லாமல் தறிகெட்டு ஓடுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகச் சாடியுள்ள அவர், மாநிலத்தை ஆளும் பொய்க்கால் குதிரை அரசு, கொலை செய்த போதை ஆசாமிகளை உடனடியாகக் கண்டுபிடித்து சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி