பாஜக மற்றும் அதிமுக விமர்சனங்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது, “தமிழ்நாட்டில் வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பிடிக்காத சங்கி கூட்டமும், அடிமைக் கூட்டமும் வழக்கு தொடுக்கிறார்கள். ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவால் இன்று கதறுகிறார்கள்” என விமர்சித்துள்ளார். முன்னதாக, மகளிர் உரிமைத் தொகை வழங்கவிடாமல் சிலர் தடங்கல் ஏற்படுத்த இருப்பதாக கூறி, பெண்களுக்கு முதலமைச்சர் ரூ.5000 வழங்கினார்.