கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து ஓட்டுநர் ஒருவர் பயணிகளின் உயிரை ஆபத்தில் ஆழ்த்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாலவள்ளி–மைசூர் சாலையில் பேருந்தை இயக்கிக்கொண்டே கைபேசியில் ரீல்ஸ் பார்த்ததாக கூறப்படுகிறது. பரபரப்பான சாலையில் நடந்த இந்த பொறுப்பற்ற செயலில் பயணிகள் கடும் கோபம் தெரிவித்தனர். அந்த ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.