தவெக எம்.எல்.ஏ-க்கள் அதிகார வரம்பை மீறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ கனிமொழி ஜோதிட அலுவலகத்தில் கூட்டம் நடத்திய சர்ச்சை ஓய்வதற்குள், சூலூர் தவெக எம்.எல்.ஏ சுகுமார் அரசு அதிகாரிகளைத் தனது வீட்டிற்கு வரவழைத்து ஆய்வு நடத்தியுள்ளார். இது குறித்து அவர், அலுவலகம் தயாராகாததால் மக்கள் பிரச்னைகளைச் சரிசெய்யவே அதிகாரிகளைச் சந்தித்ததாக விளக்கம் அளித்துள்ளார்.