கரூர் துயரச் சம்பவ வழக்கில் கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகிகள் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகிய இருவரும் இன்று (அக்.15) விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை, நீதிமன்றக் காவலில் இருந்து விடுவித்து கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இந்த உத்தரவையடுத்து நீதிமன்றத்திற்கு வெளியே தவெகவினர் மற்றும் வழக்கறிஞர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடியுள்ளனர். கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
நன்றி: சன்நியூஸ்