தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்த நிலையில், தற்போது தனது அரசியல் பயணத்தை கேரளம் மாநிலத்திலும் விரிவுபடுத்த தொடங்கியுள்ளது. கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் முதல் மாவட்ட அளவிலான கூட்டத்தை நடத்தி உறுப்பினர் சேர்க்கை பணியை கட்சி தொடங்கியுள்ளது. இந்த நிகழ்வில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.