தஞ்சை: உண்ணாவிரத போராட்டம்; அதிரடி கைது (VIDEO)

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பட்டுகூட்டுறவு சங்கத்தில் 1800-க்கும் மேற்பட்ட கூறுப்பினர்கள் நெசவாளர்களாக உள்ளனர். நேற்று சி.ஐ.டி பட்டுத் தொழிற்சங்க தலைவர் நாகேந்திரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் நெசவுக்கூலியை வங்கியில் செலுத்தாமல் ரொக்கமாக வழங்க வலியுறுத்தி திருபுவனம் பட்டுக்கூட்டுறவுசங்கம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் திருபுவனம் பட்டுக்கூட்டுறவு சங்கம் முன்பு சன்னதி தெருவில் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற 32 பெண்கள் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி