தொடர்ந்து 11 மணி வரை இந்த காற்றின் தாக்கம் இருந்தது. அதன்பிறகு மெல்ல மெல்ல காற்றின் வேகம் குறைந்தது. அதன்பிறகு மீண்டும் படகை நிறுத்திவிட்டு மீனவர்கள் கரை திரும்பினர். இந்த காற்று காரணமாக சில படகுகள் கரைக்கு தள்ளப்பட்டன. இதனால் அந்த படகுகள் பலத்த சேதம் அடைந்தன. மல்லிப்பட்டினம் சர்புதீன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு கடலில் மூழ்கியது, பத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சேதம் அடைந்து மீனவர்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இன்று காலையில் அந்த படகுகளை மீனவர்கள் கிரேன் மூலம் கரையில் பராமரிப்பு மேற்கொள்வதற்காக தூக்கி வைத்தனர். இந்த பகுதி மீனவர்கள் நீண்ட காலமாக படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.