திருவிடைமருதூர் தாலுகா சோழபுரம் மதகு சாலை பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் அனுஷ்கா (வயது 13). இவர் பந்தநல்லூரில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் அனுஷ்கா வீட்டில் வேலைகள் செய்யாமலும், படிக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பந்தநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிறுமியின் பெற்றோர் பந்தநல்லூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.