தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் அருகே ஈச்சங்குடி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த 66 வயதான விவசாயி பழனிவேல், தனது வயல் அருகே நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடிச் சென்றதாக கபிஸ்தலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருடனைத் தேடி வருகின்றனர்.