திருபுவனம், இந்திரா நகரில் அமைந்துள்ள சித்தர்களின் தலைவி ஆதிசக்தி ஞானபீடம் மற்றும் பதினெண் சித்தர்கள், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன், ஸ்ரீவாலைக்குமாரி, ஸ்ரீலஸ்ரீமூட்டைசுவாமிகள் அருள்கூடம் ஆகிய திருமேனிகளின் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் இன்று ஆசீவகத் தமிழ் சித்தர் கண்ணன் அடிகள் மற்றும் கோவை காமாட்சிபுரம் ஆதீனம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கடந்த 04ம் தேதி மாலை முதல் தொடங்கிய யாக சாலை பூஜைகள் நான்கு கால பூஜைகளும் தமிழ் மந்திரங்கள் ஓதி பச்சை ஆடை உடுத்தி 60 பெண்கள் நடத்தினர். தொடர்ந்து உழவுத் தொழிலின் குறியீடாம் பச்சை ஆடை உடுத்தி பெண்கள் கோயிலின் கருவறைக்கு சென்று அவர்களது திருக்கரங்களால் தெய்வத் திருமேனிகளுக்கு அபிஷேகம் செய்தனர்.
சாதிவாரி கணக்கெடுப்பு: அன்புமணி தலைமையில் போராட்டம்