திருவாரூர்: டூவீலர் கார் மீது மோதியதில் சம்பவ இடத்தில் இருவர் பலி

பாபநாசம் அடுத்த மாலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சப்பிள்ளை மகன் சக்திவேல் (35). திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த உத்தமதானபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் வினோத் (35). நண்பர்கள் ஆன இருவரும் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் பாபநாசத்தில் இருந்து நல்லூர் வழியாக உத்தமதானபுரம் சென்றுள்ளனர். 

இந்நிலையில் நல்லூர் கடைவீதி பகுதியில் செல்லும்போது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக இவர்கள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வலங்கைமான் காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி