அதுமட்டுமின்றி ஆறுகளிலும், சிறு கால்வாய்களிலும் அப்பகுதி சிறு வியாபாரிகள் வலைவிரித்து மீன்பிடித்து ஆற்றங்கரை ஓரத்திலும் அதைய ஒட்டியுள்ள பகுதிகளிலும் தரைக்கடைகள் அமைத்து விற்பனை செய்வது வழக்கம். இன்னும் சிலர் ஆற்று மீன்களை பிடித்து கூடைகளில் எடுத்துச்சென்று தெருக்களிலும், சந்தைகளிலும் கொண்டுசென்று விற்பனை செய்வது வழக்கம். ஆறுகளில் பிடிக்கப்படும் ஆத்துவளை, கண்ணாடிகெண்டை, ரோகு, கட்லா, வாளமீன், அயிரை, வெளிச்சி, கெண்டைபொடி மற்றும் ஆற்று இறால் போன்றவை வளர்ப்பு மற்றும் கடல்மீன்களை விட ருசிமிகுந்தவை என்பதால் ஆற்று மீன்களுக்கான தேவை எப்போதும் இருக்கும். ஆனால், ஆறுகளில் தற்போது தண்ணீர் வரத்து இல்லாததால் நாட்டு மீன் பிடித்தொழில் முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால், கடைகளிலும், மார்கெட்டிலும் வளர்ப்பு மற்றும் கடல் மீன்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
தோல்வியுடன் ஓய்வு பெற்றார் WWE ஜாம்பவான் ஜான்சீனா