இப்பகுதியில் சமீபத்தில் பெய்த தொடர்ந்து கனமழை காரணமாக 100 ஏக்கருக்கும் மேல் விவசாய நிலங்களில் மழைநீர் சூழ்ந்து நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிக அளவில் செலவு செய்துள்ள நிலையில் கடனை எவ்வாறு அடைப்பது என தெரியாமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அரசு அதிகாரிகள் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், வடிகால் வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!