திருவையாறு: 11 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை.. முதியவர் கைது

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவரை காவல் துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர். திருவையாறு லிங்கத்தடி புதுத்தெருவைச் சேர்ந்தவர் எஸ். ராஜதுரை (60). 

இவர் டிசம்பர் 30 ஆம் தேதி 11 வயதுச் சிறுமிக்கு இனிப்பு கொடுத்து தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து ராஜதுரையை வியாழக்கிழமை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி