முதல் நூலை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ரெங்கசாமி, ரெத்தினசாமி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். விழாவில் சிங்கப்பூர் முன்னாள் விரிவுரையாளர் திருநாவுக்கரசு, தஞ்சாவூர் லிட்டில் ஸ்காலர்ஸ் மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர் சுவாமிநாதன், சென்னை கிழக்கு பதிப்பகம் உதவி ஆசிரியர் நன்மாறன் திருநாவுக்கரசு ஆகியோர் மதிப்புரை ஆற்றினர்.
விழாவில் தஞ்சாவூர் மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் சங்கர், மானாங்கோரை ஸ்டார் லயன் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி கல்லூரி தலைவர் மதனகோபால், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் உதவி பதிவாளர் (பணி நிறைவு) ஜம்புலிங்கம், தஞ்சாவூர் ராமநாதன் ஆஸ்பத்திரி மருத்துவர் சதீஷ், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.